Header Ads

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவையில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்க ஏற்பாடு.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் மாநில பிரதிநிதித்துவ பேரவையில் ஆயிரத்திற்கு அதிகமானோர் சீருடை உடன் பேரணியில் பங்கேற்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான கூட்டம் வரவேற்பு குழு அலுவலகத்தில் நடைபெற்றது.


 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை டிசம்பர் 17ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. சங்கத்தின் மாநில தலைவர் மு. அன்பரசு தலைமையில் நடைபெறும் இந்த பேரவையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்தும், அரசு செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு எடுத்துக் கூறும் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநில பிரதிநிதித்துவ பேரவையை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும் பேரணியில் சீருடை உடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்க நடைபெற்ற வரவேற்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


 மேலும் அனைத்து துறைகளுக்கும் அழைப்பிதழ்கள் சீருடைகள் வழங்கப்பட்டது.நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட செயலாளர் சுரேஷ்,வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி, வரவேற்பு குழு தலைவர் சுகுமார் உள்ளிட்டு எண்ணற்றோர் பங்கேற்றனர்.

No comments