Header Ads

அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா .மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா .மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் மேனகா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.



 மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் கலை இலக்கிய போட்டிகள் நடன போட்டிகள் நடைபெற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிகள் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்

. நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு நடனத்தை மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் நடனம் ஆடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, சென்னை சில்க்ஸ் மேலாளர் சங்கர் உள்ளிட்டு அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

No comments