Header Ads

எடப்பாடி பழனிச்சாமி மீது அடுத்தடுத்து ஊழல் புகார் வருவதின் காரணமாகவே பிரதமர் அவரை சந்திக்க மறுப்பதாக சேலத்தில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி.

எடப்பாடி பழனிச்சாமி மீது அடுத்தடுத்து ஊழல் புகார் வருவதின் காரணமாகவே பிரதமர் அவரை சந்திக்க மறுப்பதாக சேலத்தில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி காட்டம்



ஊழல் புகாரில் விரைவில் எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வார், இதனால் அவர் தேர்தலில் நிற்க முடியாத நிலை உருவாகும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.....அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் புதிதாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக தினேஷ் குமார் என்பவரும் , மற்றும் புறநகர் மாவட்டங்களான எடப்பாடி, சங்ககிரி சட்டமன்ற தொகுதிகுக்கான செயலாளர் ஆக ராஜேந்திரன், வீரபாண்டி ,ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளராக ஜெய்சங்கர் , மேட்டூர் ,ஓமலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளராக ராஜ்குமார், ஆத்தூர் ,கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளராக பெரியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

   இந்த நிலையில் இன்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி தலைமையில், சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர் , ஜெயலலிதா சிலைக்கு புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புகழேந்தி தலைமையில் ஊர்வலமாக வந்த ஓபிஎஸ் அணியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 

இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறும் போது.... எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஊழல்வாதி , அவர் தொடர்ந்து ஊழல் வழக்கை சந்தித்து வருகிறார் என்ற காரணத்தினால் தான் பிரதமர் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க மறுத்து வருகிறார். 4500 கோடிக்கான ஊழல் வழக்கை தற்போது எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வருகிறார். மற்றும் கோடநாடு கொலை வழக்கு என இப்படி பல வழக்குகளில் சிக்கியுள்ளார் எனவே விரைவில் அவர் மீது வழக்கு பதிவாகி சிறைக்குச் செல்வார் இதனால் அவர் தேர்தலில் நிற்க முடியாத நிலை உருவாகும் என்றார்.தொடர்ந்து கூறியவர் எனவே அதிமுகவில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை நம்ப வேண்டாம் என்றார்.தொடர்ந்து கூடியவர் எடப்பாடி பழனிச்சாமி சமீப காலமாக உளறி வருகிறார் கர்நாடக மாநிலத்தில் கோலாலம்பூரில் புகழேந்தி கெடுத்துவிட்டார் என்கிறார் மலேசியாவில் தான் கோலாலம்பூர் உள்ளது.

 கர்நாடகாவில் உள்ள கோலார் என்பதற்கு பதிலாக கோலாலம்பூர் என்று உளறி வருகிறார். சேலம் மாவட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கைப்பற்றுவோம் என உறுதியாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து ஜெயக்குமார் சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை அமர வைக்கக்கூடாது என தெரிவித்துள்ளாரே?  
என்ற கேள்விக்கு பதில் அளித்த புகழேந்தி...

ஜெயக்குமாரை மக்களே புறக்கணித்து விட்டார்கள் . அவர் தற்போது எம்எல்ஏ வும் இல்லை. மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஜெயக்குமார் தொடர்ந்து உளறி வருகிறார். கட்சியில் அவர் கொறடாவும் இல்லை , எம்எல்ஏ-வும் இல்லை . எனவே இது பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை என்றார். தொடர்ந்து கூறியவர் சி.வி சண்முகம் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார், எனவே உடனடியாக தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

No comments