Header Ads

பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் அமைப்பதற்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்களும், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

தமிழ்நாடு முதலமைச்சர்  வழிகாட்டுதலுடன் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் அமைப்பதற்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்களும், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

அதனைத் தொடர்ந்து பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் மூலவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தார்பாய்கள் மற்றும் பண்ணைக் கருவிகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.


பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார்,ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா,கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments