Header Ads

சேலம்மாவட்டம்ஓமலூர் அருகே அரசு பஸ்கள் மீது கல் வீச்சு வாலிபர்களிடம் விசாரணை.

ஓமலூர் அருகே அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்தது குறித்து, வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூரில் இருந்து தாரமங்கலத்துக்கு, நேற்று முன்தினம் இரவு சென்ற டவுன் பஸ் மற்றும் ஈரோட்டில் இருந்து ஓமலூர் நோக்கி வந்த மொபசல் பஸ் மீது மூங்கில் ஏரிக்கரை பஸ் ஸ்டாப் பகுதியில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி சங்கீதா, தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால் பாமகவை சேர்ந்தவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டனரா? அல்லது அவர்களது பெயரை சொல்லி வேறு யாரேனும் இச்சம்பவத்தில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில், அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments