Header Ads

தாதகாப்பட்டியில்பொதுமக்களிடம் நடந்து சென்று குறைகளை கேட்ட போலீஸ் கமிஷனர்

சேலம் மாநகர போலீசார் சார்பில் சேலம் பிரபாத்- தாதகாப்பட்டி சிக்னல் பகுதியில் இருந்து தாதகாப்பட்டி கேட் வரை நடைபயண ரோந்து நிகழ்ச்சி நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கி அப்பகுதியில் நடந்து சென்று அங்குள்ள பொதுமக்கள், சாலையோர சிறு வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் உதவி கமிஷனர்கள் மோகன்ராஜ், மாடசாமி, உதவி ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) சரவணன், உதவி ஆணையர் (அன்னதானப்பட்டி) அசோகன், இன்ஸ்பெக்டர் (அன்னதானப்பட்டி) சந்திரகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments