Header Ads

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பாரத பிரதமர் மோடி படத்தை வைக்க முயன்ற பாஜகவினர் 20க்கும் மேற்பட்டோர் கைது.

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பாரத பிரதமர் மோடி படத்தை வைக்க முயன்ற பாஜகவினர் 20க்கும் மேற்பட்டோர் கைது

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பாரத பிரதமர் மோடி படத்தை வைக்க முயன்ற பாஜகவினர் 20க்கும் மேற்பட்டோர் கைது,பாஜகவினரும் திமுகவினரும் மாறி மாறி எதிர் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ...

கொரானாகாலத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பாரத பிரதமர் மோடி படத்தை வைக்க பாஜகவினர் திட்டமிட்டு அதற்காக இன்று 20க்கும் மேற்பட்டோர் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றனர் பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாஜகவினர் ரேஷன் கடை முன்பு திரண்டு மத்திய அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்களும் மற்றும் பாரத பிரதமர் மோடி படத்தை வைக்க முயற்சி மேற்கொண்டனர்

இதனையறிந்த கொண்ட திமுகவினர் அங்கு வந்து பாஜக நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர் தொடர்ந்து அனுமதியின்றி கூடியதாக பாஜகவினர் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

 இதுகுறித்து மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு கூறும்போது மத்திய அரசின் சாதனைகளை விளக்கியும் பாரத பிரதமரின் உருவப்படத்தை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இங்கு வந்ததாகவும் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்து தங்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தார் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளை பாரத பிரதமரின் படத்தை வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் ரேஷன் கடையில் பாரத பிரதமரின் படம் வைக்க வந்த பாஜகவிற்கு அனுமதி மறுத்து அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

No comments