Header Ads

சேலம் அருகே பட்டறை உரிமையாளரை மீது மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல்.

சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்ம செட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் பள்ளப்பட்டி அருகே உள்ள கோரிக்காடு பகுதியில் பருப்பு மில்லுக்கு தேவையான மெஷினை தயார் பண்ணும் பட்டறை வைத்துள்ளார்.

இந்த நிறுவனத்தில் பாஸ்கர் சாரதி என இருவர் பணிபுரிந்து வருகின்றனர் வழக்கம் போல இன்று காலை பட்டறையைத் திறந்து பணி செய்து கொண்டிருக்கும் போது சுமார் எட்டு மணி அளவில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சிவகுமாரை இரும்பு கம்பியால் மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.

இதை தடுக்க வந்த பட்டறை ஊழியர்கள் பாஸ்கர் சாரதி மீதும் தாக்குதல் நடத்தி மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றனர். பலத்த காயம் அடைந்த சிவகுமார் பாஸ்கர் சாரதி ஆகிய மூன்று பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை ஆணையாளர் மாடசாமி உதவி ஆணையாளர் நாகராஜ் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சிவக்குமாருக்கு சொந்தமான வீடு திருமலைகிரி பகுதியில் உள்ளது அந்த வீட்டில் ஏழுமலை என்பவரை போக்கியத்திற்கு குடியிருந்து வருகிறார்.இந்த நிலையில் போக்கியத்திற்கு குடியிருக்கும் எழுமலைக்கும் சிவகுமாருக்கும் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இதன் காரணமாக தாக்குதல் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தாக்குதல் நடத்திய மர்ம கும்ப கும்பல் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காலை நேரத்தில் முகமூடி அணிந்து கொண்டு மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுஇது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபப்பை ஏற்ப்படுத்திதுள்ளது.

No comments