Header Ads

சேலம் லாரி உரிமையாளர் சம்மேளன சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் தவறாக அபராதம் விதிப்பதை முறைப்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர் சம்மேளன சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்



மாநில லாரி உரிமையாளர் கள் சம்மேளனத்தில் மாநிலத் தலைவர் தன்ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்று அளித்தனர்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் லாரி உரிமையாளர் சங்க மாநிலத் தலைவர் தன்ராஜ் கூறும் போது. தமிழகத்தில் கனரக வாகனம் உள்ளிட்ட அனைத்து விதமான லாரிகள் லட்ச கணக்கில் இயங்குகிறது இந்த நிலையில் வாகனங்களுக்கு அபராதம் என்ற பெயரில் சாலையோரம் பெட்ரோல் பங்க் பார்க்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகன எண்களை வைத்து மட்டும் ஆன்லைன் அபராதம் விதிக்கிறார்கள் இதனால் லாரிக்கு அபராதம் விதிக்கப்படுகிறது

 காரணம் பார்த்தால் தலைகவசம் அணியாமல் சென்றதாக அபராதம் செலுத்த வேண்டியுள்ளது மேலும் சீட் பெல்ட் அணியாமல் சென்ற குற்றத்திற்கு இரண்டு சக்ர வாகனத்திற்கு அபராதம் செலுத்தும் நிலை உள்ளது குறிப்பாக 1500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது காரணமே இல்லாமல் அபராதம் செலுத்தும் இந்த முரண்பாடுகளை களைய நேரடியாக ஆய்வு செய்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர் 

மேலும் அவர் கூறும்போது இதுபோன்று முரண்பாடுகளான அபராதத்தினால் பண இழப்பு அடைவதுடன் தொழில் பாதிக்கப்படுகிறது இதனால் லாரிகளை இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது ஏற்கனவே டீசல் விலை உயர்வு இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் லாரி உரிமையாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் வேளையில் ஆன்லைன் அபராதத்தால் மேலும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது எனவே காவல்துறையினர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஆன்லைன் அபராதத்தை தடுத்து முறையான அபராதத்தை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துக் கொண்டனர்

 அவ்வாறு செயல்படுத்தாவிட்டால் லாரி உரிமையாளர் சங்கம் கூட்டம் கூட்டி வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்பேட்டியின் போது லாரி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

No comments