Header Ads

சேலம் சாரதா அறக்கட்டளையின் சார்பில் நீர் சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாக சிக்னேச்சர் ஓவியப்போட்டி சேலத்தில் நடைபெற்றது...

சாரதா அறக்கட்டளையின் சார்பில் நீர் சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாக சிக்னேச்சர் ஓவியப்போட்டி சேலத்தில் நடைபெற்றது...

சாரதா அறக்கட்டளையின் சார்பில் நீர் சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாக சிக்னேச்சர் ஓவிய போட்டி சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த ஓவியப் போட்டியில் சிறுவர்,சிறுமிகள் முதல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வரையிலான போட்டி நடைபெற்றது.இதில் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற 100 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சாரதா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் லலிதா கோவிந்தராஜ், சாலர் பிலிம்ஸ் புரொடக்சன் நிர்வாக இயக்குனர் சங்கர் மற்றும் நிலா,மேகா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். வெற்றிப் பெற்றவர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரி தாமோதரன் பரிசுகளை வழங்கி, பாராட்டுகளை தெரிவித்தார்.

No comments