அதேபோல ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியை சேர்ந்த சில்லி சிக்கன் கடை நடத்தும் பூவரசனும், மல்ல கவுண்டனூரை சேர்ந்த அனிதாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இவர்களும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில், இன்று இந்த ஐந்து ஜோடிகளும் அடுத்தடுத்து பாதுகாப்பு கேட்டு, ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை தொடர்ந்து ஓமலூர் காவல்துறையினர் ஐந்து காதல் ஜோடிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து சமாதானம் செய்து வைத்து, காதல் ஜோடிகளை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கோபத்துடன் காவல் நிலையம் வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்த சம்பவத்தினை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதனால், இன்று காலை முதல் ஓமலூர் காவல் நிலையம் திருமண மண்டபம் போல காட்சியளித்தது.